தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்  மீனா. இவர் அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார். தற்போது சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் மீனா ஆக்டிவாக இருந்த காலத்திலேயே வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கும் நிலையில் கடந்த ஜூன் மாதம் வித்யாசாகர் உடல் நலக் குறைவினால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்குப் பிறகு நடிகை மீனா தற்போது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் நடிகை மீனா பற்றி பேசிய ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அவர் கூறியதாவது, நடிகர் சரத்குமார் மீனாவும் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் நடிகர் சரத்குமார் மீனாவை பெண் கேட்டு சென்றார். ஆனால் சரத்குமார் மற்றும் மீனாவுக்கு அதிக வயது வித்தியாசம் இருந்ததால் மீனாவின் தாயார் திருமணத்திற்கு சம்மதிக்காததோடு தற்போது மீனா படங்களில் கவனம் செலுத்தி வருவதால் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதனால் சரத்குமார் அமைதியாக விலகி விட்டார். அதன்பிறகு சினிமாவில் பந்தா இல்லாத ஒரே நடிகை என்றால் அது மீனா தான். நடிகை மீனா கமல்ஹாசனுடன் அவ்வை சண்முகி படத்தில் நடித்த போது அவர் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. மிகவும் அமைதியான நடிகை. கேரவன் கூட கேட்டது கிடையாது. அந்தப் படத்தில் நானும் நடித்திருந்தேன். மேலும் சினிமாவில் அமைதியான முறையில் பந்தா இல்லாத ஒரே நடிகை என்றால் அது மீனா தான் என்று மிகவும் பெருமிதத்துடன் பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசியுள்ளார்.