நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் 13 ஆண்டுகளாக தன்னுடன் பள்ளியில் படித்த நபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், இருவீட்டார் சம்மதம் கிடைத்ததையடுத்து விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய கீர்த்தியின் தாய் மேனகா, இது முற்றிலும் பொய்யான தகவல், இதுகுறித்து பேசுவதற்கு வேறெதுவும் இல்லை என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.