தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை இலியானா. தற்போது ஒரு சில ஹிந்தி திரைப்படங்களில் மட்டுமே நடித்த வரும் இவர் மற்ற மொழி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றார். இந்நிலையில் இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இலியானா மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள நிலையில் அதில் அவருக்கு கைகளில் ஊசி செலுத்தப்பட்டு டிரிப்ஸ் ஏற்றப்பட்டுள்ளது. பின்னர் சில நிமிடங்களிலேயே என் மீது அக்கறை கொண்டிருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி,சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று விட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பெற்றதற்கான காரணத்தை வெளிப்படுத்தவில்லை.