ஐஏஎஸ் அதிகாரியான சச்சின் சாவந்த், பிரபல நடிகை நவ்யா நாயரை சந்திக்க குறைந்தது பத்து முறையாவது கொச்சிக்கு வந்ததாக அமலாக்க இயக்குனராகத்தின் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் பண மோசடி வழக்கில் விசாரணையை எதிர்கொள்கிறார். நவ்யா நாயரை சந்திக்க அல்ல கோவிலுக்கு செல்வதற்காக கொச்சி வந்ததாக சச்சின் சாவந்த் அமலாக்க துறையிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரும் நவ்யாவும் டேட்டிங்கில் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் நடிகைக்கு பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பரிசுகளையும் அவர் வாங்கி இருப்பதும் விசாரணையில் கண்டறிந்துள்ள நிலையில் இந்த வழக்கில் தற்போது நடிகையும் சேர்க்கப்பட்டுள்ளார்.