மரண செய்தியை வெளியிட்டதற்காக “Hauterrfly” நிறுவனமும், பூனம் பாண்டேவும் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளனர். நாங்கள் சொன்ன விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காகவே இதை செய்தோம். பூனம் பாண்டேவின் தாயாரும் புற்றுநோயால் இறந்தார். நாங்கள் இவ்வாறு செய்த பின்னே மக்கள் இந்த புற்றுநோய் குறித்து அதிகமாக பேசுகின்றனர் என Hauterrfly நிறுவனம் தெரிவித்துள்ளது