பெண் யானை ஒன்று கர்ப்பமாக இருந்த நிலையில் குட்டியை ஈன்றது. ஆனால் குட்டி யானை பிறந்த பிறகு தன்னுடைய காலில் நிற்க முடியாமல் நின்றுள்ளது. விலங்குகள் பிறந்த உடனே காலில் எழுந்து நிற்கும். ஆனால் இந்த குட்டி யானை தரையில் மீண்டும் மீண்டும் விழுகிறது. அதன் பிறகு எழுந்திருக்க முயற்சி செய்கிறது ஆனால் மீண்டும் எழுந்திருக்க முடியாமல் போராடுகிறது இதனை பார்த்த அம்மா யானை மிகவும் வருத்தத்தோடு குட்டிக்கு பக்கத்தில் வேகமாக ஓடி வந்து உதவ ஆரம்பிக்கிறது.

தன்னுடைய தும்பிக்கையால் குட்டியை தூக்க முயல்கிறது. மிகவும் சிரமப்பட்டு அதனை தன்னுடைய காலில் நிற்க வைக்க போராடுகிறது. கடைசியாக அந்த குட்டி யானை தானாகவே எழுந்து நிற்கிறது. இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது.