தேர்தலில் தோல்வி அடைந்தால் மீண்டும் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு தமிழிசை சுவாரசிய பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஒருவேளை தோல்வி அடைந்தால் என்ற பேச்சுக்கே இடமில்லை. பாஜக தென் சென்னை தொகுதியில் வெற்றி பெறும் என்ற உறுதியை இப்போதே தருகிறேன். நானூறில் நானும் ஒருவராக நாடாளுமன்றம் செல்வேன் என்பதில் சந்தேகமில்லை. தேர்தல் முடிவில் அதை நீங்கள் காண்பீர்கள்” என்றார்.