கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சோசியல் மீடியாவில் மாணவிகளின் செல்போன் எண்களுடன் மர்ம நபர்கள் பதிவிட்டுள்ளனர்.

இதனை பார்த்து பலரும் அந்த மாணவிகளை தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பல்கலைக்கழக துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதனால் பல்கலைக்கழக பதிவாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஒரு மாணவியின் தோழியின் ஆண் நண்பர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

தெற்கு சாலிந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த நக்கீரன் என்பவர் பள்ளி பருவத்தில் மாணவியுடன் பேசி பழகி உள்ளார். அதன் பிறகு அந்த மாணவி பேச மறுத்ததால் பழிவாங்குவதற்காக இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.