பேடிஎம் விவகாரம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் முறையான தவறுகள் எதுவும் இல்லை எனவும் அடிக்கடி விதிமுறைகளை மீறுவதால் தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கணினியின் நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளரின் நலன்களை பாதுகாக்க பேடிஎம் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பேடிஎம் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்ற போவதாக வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.