சென்னை – மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். தெற்கு ரயில்வேயில் சென்னை – மைசூரு, மங்களூர் – திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கொல்லம் – திருப்பதி இடையே விரைவு ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

ஏற்கெனவே சென்னை – பெங்களூருவிற்கு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து மைசூருக்கு 5 மணி நேரம் 20 நிமிடங்களில் வந்தே பாரத் ரயில் மூலம் பயணம் செய்யலாம்.