நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக வார் ரூம் அறிவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி,பரப்புரை மேற்பார்வை – திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை. ஊடக விவாத குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை – திமுக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் தலைமையில் குழு. சட்டக் குழு மற்றும் தேர்தல் ஆணையம் – திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையில் குழு. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வார் ரூம் அமைக்கப்படும் எனவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.