தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக வீட்டில் முடங்கி கிடப்பதால், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். ஏதாவது முக்கியமான விழாக்களில் மட்டும் தன்னுடைய தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்கிறார். இந்நிலையில் விஜயகாந்த்துக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் அவருடைய மனைவி பிரேமலதாவுக்கு தேமுதிக செயல் தலைவர் பதவியை கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு விஜயகாந்தின் மகன் பிரபாகரனுக்கு தேமுதிகவில் ஒரு முக்கிய பதவியை கொடுப்பதற்கு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தேமுதிகவில் இளைஞர் அணி செயலாளர் பதவியை பிரபாகரனுக்கு கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி மாதம் நடைபெறும் தேமுதிக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தின் போது வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.