
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டிற்கான 2,512 கோடியை வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. இது வெளிப்படையான மிரட்டல். இந்திய அரசியல் வரலாற்றில் இது போன்ற எந்த ஒரு அரசும் கல்வியை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தியது இல்லை என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.