உத்திரபிரதேசம் மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பரேலியின் ஷெர்கர் நகரில் வார்டு ஐந்தில் தனது குடும்பத்துடன் சேடலால் என்பவர் வசித்து வருகின்றார்.

இவர்களுக்கு ஆறு வயது மகன் இருந்த நிலையில் நேற்று சிறுவன் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தெருநாய்கள் கூட்டம் அவர்கள் மீது பாய்ந்தது. அப்போது சிறுவர்கள் அனைவரும் பயந்து ஓடிய நிலையில் நாய்கள் கூட்டம் அந்த ஆறு வயது சிறுவனை கடித்து குதறியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.