தெலுங்கானா மாநிலத்தில் உள்ள  மேட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலருக்கும் அவர்களுடைய வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென்று பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை டெபாசிட் ஆகியுள்ளது. இது  குறித்து அவர்களுடைய செல்போனுக்கும் குறுந்தகவல் வந்துள்ளது. அது மட்டுமில்லாமல் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்குமே பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்துள்ளது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு சிலர் வங்கி கணக்கில் டெபாசிட் பணத்தை உடனே சென்று ஏடிஎம் கார்டு மூலமாக எடுத்து உள்ளார்கள்.

இந்த செய்தியானது மாநிலம் முழுவதும் பரவியது. இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதேபோல் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் பொது மக்களுடைய வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது இந்த சம்பவமானது வங்கி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. வங்கி கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டது என்பது குறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.  இதனைத் தொடர்ந்து வங்கிக் கணக்கில் எப்படி பணம் டெபாசிட் செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்களை போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.