தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மீட்புப்பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள திருச்செந்தூர், ஏரல் பகுதிகளில் சேதமடைந்த வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.