ஒடிசா மாநிலம் பாலச்சோர் மாவட்டத்தின் பஹனாகா பஜார் ரயில்வே ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தானது இந்தியாவையே உலுக்கியது. இதில் 275 பேர் பலியாகினார். பல நூறு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி அவர்கள் பார்வையிட்டு காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து தற்போது விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தென்கிழக்கு ரயில் பிராந்தியத்தில் 24 விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பஹநக பஜார் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் மொத்த இன்டர் லாக்கிங் அமைப்பும் மாற்றப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.