ஆதார் அட்டை இன்றி நம்மால் தற்போது எவ்விதமான பணியையும் செய்ய இயலாது என்ற நிலை உருவாகிவிட்டது. இதனிடையே ஆதாரில் விபரங்களை புதுப்பிப்பது இனிமேல் இலவச சேவையாக கிடைக்காது. ஏனெனில் UIDAI விரைவில் இதற்கு கட்டணம் வசூலிக்க துவங்கலாம்.

ஆதார் கார்டிலுள்ள விபரங்களை இலவசமாக புதுப்பிக்க உங்களுக்கு ஜூன் 15ஆம் தேதி வரை மட்டுமே அவகாசம் இருக்கிறது. கடந்த 10 வருடங்களில் ஒரு முறை கூட ஆதாரில் எதையும் புதுப்பிக்காதவர்கள் ஆதாரை புதுப்பிப்பது அவசியம் ஆகும். அதே நேரம் ஜூன் 15-க்கு பிறகு இந்த பணிக்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.