தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (21.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது எனவும்  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மழை பாதிப்பு மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.