கனமழை மற்றும் வெள்ளத்தால் தென் தமிழகம் தத்தளித்து வருகிறது. மழை குறைந்தாலும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த வாரம் பெய்த மழையால் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், வெள்ளம் காரணமாக உடல்களை எரியூட்டும் தகனக் கூடங்கள் நீரில் மூழ்கியதால், இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய கடும் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் கோவையில் இருந்து நடமாடும் எரிவாயு மேடை கொண்டுவரப்பட்டு உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. இறந்தவர்களின் உடல்கள் இருக்கும் பகுதிகளின் அருகே உள்ள மையானத்திற்கே இந்த மேடையை வாகனம் மூலமாக கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டு வருகிறது.