திருநெல்வேலி சிறப்பு ரயிலானது மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பயணிகள் உடைய வசதிக்காக சென்னை- திருநெல்வேலி சென்னை வாராந்திர ரயிலானது மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும். அதன்படி மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயக்கப்படும்.

சென்னை முதல் திருநெல்வேலி வாராந்திர ரயிலானது(06069)டிசம்பர் 22 முதல் ஜனவரி 19 வரையிலும், திருநெல்வேலி- சென்னை வாராந்திர ரயில் டிசம்பர் 28 முதல் ஜனவரி 18 வரையும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.