தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுகூட்டுடன்காடு பகுதியில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் புதுக்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுடலை உறவினரின் குழந்தைகளையும், தாயையும் பராமரித்து பண உதவி செய்து வந்தது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய போது கோபத்தில் தூங்கி கொண்டிருந்த சுடலை மீது மகாலட்சுமி கொதிக்கும் வெந்நீரை ஊற்றி விட்டார். இதனால் படுகாயமடைந்த சுடலை தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுடலை தாக்கியதால் காயம் அடைந்த மகாலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.