துலாம் ராசி அன்பர்களே, 

இன்று எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக ஆராய்ந்து ஈடுபட வேண்டி இருக்கும். சந்திராஷ்டமம் ஆரம்பித்து விட்டதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். வீண்பகையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.

கெட்ட சகவாசங்களை விடுவது நல்லது. சேமிப்பு பணம் செலவிற்கு பயன்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அடுத்தவர்களின் கருத்துக்களை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். சந்திராஷ்டம முடியும் வரை பொறுமையாக இருங்கள். குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். பெண்கள் அவசரப்பட வேண்டாம்.

தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். இன்று மாணவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். சக நண்பர்களை அனுசரித்து செல்லுங்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்