துலாம் ராசி அன்பர்களே

இன்று உங்களுடைய நியாயமான பேச்சை சிலர் ஏற்றுக் கொள்வதற்க்கு மறுப்பார்கள். ராசியில் சந்திராஷ்டமம் ஆரம்பிக்க இருப்பதால் எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது. குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். நிலுவையில் இருந்த பணம் வசூலாகும். பெண்கள் நகையை இரவல்  குடுக்கல் வாங்கல் வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு  பின்னர் சரியாகும்.

இன்று பிள்ளைகள் நலனுக்காக பாடுபடுவீர்கள் .அதில் ஞானம் நிறைந்த சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும். கொடுக்கல் வாங்கலை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். கோபத்தை அடியோடு விட்டு விடுவது நல்லது. பெண்கள் இன்று புத்தி கூர்மையை வெளிப்படுத்த வேண்டும். நிதானமாக இருப்பது நல்லது. முடிந்தால் ஆலயங்களுக்கு சென்று வரலாம். குலதெய்வத்தின் வழிபாடு மன நிம்மதியை கொடுக்கும்.

இன்று மாணவர்கள் தைரியமாக செயல்பட வேண்டும். படிப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.சக மாணவர்களோடு நட்போடு இருப்பிர்கள்.  இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் .நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை   : மேற்கு

அதிஷ்ட எண்   : ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்   : சிவப்பு மற்றும் பச்சை நிறம்