துபாயில் நட்சத்திர ஹோட்டல்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதாக கூறி சின்னத்திரை நடிகைகள் பலரை ஏமாற்றி அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வேலை தேடும் பெண்கள் மற்றும் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்று விரும்பும் பெண்கள் ஆகியோரை குறி வைத்து துபாயில் வேலை இருப்பதாக கூறி அழைத்து செல்கிறார்கள். அதோடு சின்னத்திரை நடிகைகள் பலரை கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைத்துச் செல்வதாக கூறி துபாய்க்கு அழைத்து சென்றுள்ளனர். இப்படி அழைத்துச் செல்லப்படும் பெண்களை அவர்கள் கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹோட்டல் ஊழியர்களின் உதவியோடு தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி அவர்கள் அந்த பெண்ணை மீட்ட நிலையில் இந்தியா வந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் தான் மேற்கண்ட அதிர்ச்சிகரமான விவரங்கள் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் ஆபியா, ஜெயக்குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளியான துபாய் கிளப் உரிமையாளர் முஸ்தபா புத்தங்கோடி என்பவரை தேடி வந்த நிலையில் அவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் வேறு யாருக்கு என்னும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.