திருச்சியில் நடைபெறும் அதிமுகவின் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர் பாமகவை மறைமுகமாக சாடினார். கூட்டணியில் இருக்கின்றோம், இருக்கின்றோம் என நாடகம் நடத்தியவர்கள் தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் ‘துண்ட காணோம், துணிய காணோம்’ என வேறு இடத்திற்கு, கூடாரத்தை காலி செய்து போய்விட்டனர் தேமுதிக அப்படி கிடையாது; ஒரு வார்த்தை சொன்னால் உறுதியாக இருப்போம் என தெரிவித்தார்.