மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருப்பூரில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று காலை அவிநாசிலிங்கம் கோயிலுக்கு சென்ற அவர், பாஜக சின்னம் பொறித்த துண்டினை தோளில் அணிந்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியிருக்கும் நிலையில் அவரின் இந்த செயல் விதிகளை மீறும் வகையில் உள்ளது.