மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆளும் பாஜக கூட்டணியில் மோதல் வெடித்துள்ளது. அக்கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிக்கு பாராமதி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே தொகுதியில் போட்டியிட பாஜக கூட்டணியைச் சேர்ந்த சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சியும் முயல்கிறது. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று அஜித் பவார் எச்சரித்துள்ளார்.