தமிழகத்தில் துணை முதலமைச்சர் பதவி என்பது அது முதல்வரின் முடிவு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது, துணை முதல்வர் பதவி என்பது முதலமைச்சர எடுக்கும் முடிவு. ஒவ்வொரு பிறந்தநாளிலும் மக்கள் நலத்திட்டங்கள் செய்வதன் மூலம் திருப்தி இருக்கிறது. டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடக்கும் மாநாட்டில் தொண்டர்கள் எழுச்சியோடு கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இருந்தாலும் டிசம்பர் மாநாட்டுக்கு பிறகு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.