நடிகர் அஜித் நடித்திருக்கும் “துணிவு” படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று(ஜன,.11) முதல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை காண நேற்றிரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளை சூழ்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் ரோகினி திரையரங்கில் துணிவு திரைப்படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் திரையரங்கின் முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடியபோது கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இதில் உயிரிழந்த அஜித் ரசிகர் சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த 19 வயதான பரத்குமார் என தெரியவந்து உள்ளது. இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.