உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர், கணவன்-மனைவியை ஒன்று சேர்க்க  இரு தரப்பினரும் காவல் நிலையம் சென்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மருமகனுடன் தகராறு ஏற்பட்டு மருமகனை, மாமனார் குடும்பத்தினர் உயிருடன் எரித்து கொன்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.