ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக 120 நாட்களுக்கு முன்பாக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விடும். இந்த வருடம் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு ஜூலை 12ஆம் தேதி அதாவது இன்று தொடங்குகிறது.

இன்று காலை 8 மணி முதல் ரயில் டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் ஐ ஆர் சி டி சி இணையதளம் மூலமாக டிக்கெட் விலை முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்று முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9ஆம் தேதியும், 13ஆம் தேதியில் முன்பதிவு செய்தால் நவம்பர் 10 ஆம் தேதியும், ஜூலை 14ஆம் தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 11ஆம் தேதியும், ஜூலை 15ஆம் தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 12ம் தேதியும் பயணிக்கலாம்.