தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு தமிழக தீயணைப்புத் துறை வீரர்களுக்கு விடுமுறை கிடையாது என தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 8,000 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பட்டாசுகளை பாதுகாப்புடன், அனுமதிக்கபட்ட நேரத்தில் மட்டும் வெடித்து ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு தீபாவளிக்கு மறுநாள் 13ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.