
சென்னை பெரவள்ளுர் கே சி கார்டன் ஆறாவது தெருவை சேர்ந்த இன்ஜினியர் லோகேஷ் என்பவர் சோளிங்கநல்லூர் பகுதியில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை இவருக்கும் திருச்சியை சேர்ந்த ராஜலக்ஷ்மி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. அதன் பிறகு மணமக்கள் பேரவள்ளூரில் உள்ள மணமகன் லோகேஷ் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு மணமக்கள் இருவரும் ஒரு அறையில் இருந்த நிலையில் லோகேஷ் திடீரென வாய் மற்றும் மூக்கில் நுரை தள்ளிய நிலையில் மயங்கினார்.
அதன் பிறகு உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் செய்தி மணமகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணமகள் ராஜலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவருடைய முதல் கணவர் கொரோனா காலத்தில் உயிரிழந்த நிலையில் லோகேஷன் இரண்டாவதாக திருமணம் செய்தார். ஆனால் திருமணம் நடந்த அன்றே இரண்டாவது கணவரையும் அவர் பறிகொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.