பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் சரிதா குமாரி. இவரும் கார் ஓட்டுநரான தர்மேந்திர குமார் என்பவரும் கடந்த ஐந்து மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரிதா குமாரி தர்மேந்திர குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அப்போது மறுப்பு தெரிவித்த தர்மேந்திர குமார் தனக்கு வீட்டில் வேறு பெண் பார்த்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சரிதா குமாரி தனது நண்பர் ஒருவருடன் இணைந்து தர்மேந்திர குமாரின் முகத்தில் ஆசிடால் தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தர்மேந்திர குமார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சரிதா குமாரியை கைது செய்துள்ளனர்.