தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் நடிகை கௌசல்யா. இவர் அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார். இந்நிலையில் இவர் என்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

அதாவது நான் எனக்குப் பிடித்த பொருத்தமான நபரை இன்னும் என் வாழ்வில் சந்திக்கவில்லை எனவும் அதனால் தான் திருமணம் செய்ய வில்லை என நடிகை கௌசல்யா தெரிவித்துள்ளார். ஒருவேளை அப்படி ஒரு நபரை பார்த்திருந்தால் திருமணம் குறித்து யோசித்து இருந்திருப்பேன். எனது பெற்றோரோடு ஒன்றி வாழ்ந்து பழகி விட்டேன். அவர்கள் இன்றி நானும் நான் இன்றி அவர்களும் வாழ முடியாது என கூறியுள்ளார்.