மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசு சார்பாக திருமணமாகாத பெண்களுக்கு ஓய்வூதி திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதாந்தோறும் 600 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பயனடைவார்கள். அதுமட்டுமின்றி இதற்கு சில நிபந்தனைகளும் உள்ளது. அதாவது பென்ஷன் வாங்க பெண்கள் அந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

50 வயதாக இருக்க வேண்டும். வருமானவரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. அரசு பணியில் இருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் மத்திய பிரதேசத்தின் சொந்த சான்றிதழ், ஒன்பது இலக்க கூட்டு ஐடி, வயது சான்றிதழ், வங்கி பாஸ்புக், திருமணமாகாதவர் பற்றிய அறிவிப்பு, வருமான வரி செலுத்துவோர் இல்லை என்பதற்கான சான்று அளிக்கப்பட்ட அறிவிப்பு போன்றவற்றோடு விண்ணப்பிக்கலாம்.