கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காளிங்கவரத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனிவாசன் மீனாட்சி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை சீனிவாசனின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மீனாட்சி தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் காதல் திருமணத்தை சீனிவாசனின் குடும்பத்தினர் ஏற்காததால் மீனாட்சி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

கடந்த 10- ஆம் தேதி மீனாட்சி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை பக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் மீனாட்சி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.