திருமண வயதை எட்டியும் திருமணம் ஆகாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஜாதகத்தில் கோளாறு, குடும்ப பிரச்சனை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சப்த கன்னிகளை வணங்குவதன் மூலம் திருமண தடை விலகும் என்று கூறப்படுகிறது.

சப்த கன்னிகள் இருக்கும் கோவிலுக்கு ஏழு தேங்காய்கள் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அங்கு தேங்காயை இரண்டாக உடைத்து அடிப்பாகத்தில் இலுப்பை எண்ணெய் ஊற்றி சிவப்பு நிற நூலை திரியாக போட்டு பொருத்த வேண்டும்.

தேங்காய் தீபத்தை பொருத்தி விட்டு சப்த கன்னிகள் முன்பு மண்டியிட்டு திருமணம் தடைபடுவதற்கான காரணத்தை கூறி அந்த தடை விலக வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் விரைவில் வீட்டில் சுப காரியம் நடந்திடும். இந்த வேண்டுதலை ஆண் பெண் என யார் வேண்டுமானாலும் செய்யலாம்.