
திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களுடைய அரசியல் பலிக்காது என்று சென்னையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்துள்ளார்.
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்பொழுது, “திருப்பரங்குன்ற மக்களுக்கு எதிராக சில அமைப்புகள் சதி செய்ய முயற்சி செய்கிறது. நாளை திருப்பரங்குன்றம் கோயிலிலும் சிக்கந்தர் பாதுஷா தர்காவிலும் வழிபாடு செய்ய உள்ளோம். தமிழ்நாடு அரசு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்கக் கூடாது.
ஜனநாயகம் தான் எங்கள் கோட்பாடு. அதனை சீர்குலைக்க நினைப்பவர்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். பாஜக ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் எவ்வளவு அறிவுரை கூறினாலும் அவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக வேண்டும் என்று எல்லா குறுக்கு வழியிலும் கையாளுகிறார்கள். முருகனிடம் உங்கள் அரசியல் எடுபடாது என்று பேசி உள்ளார்.