திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு முன்னதாகவே சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பதியில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சாமி தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் தினமும் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.