தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முஸ்தாபாத் மண்டலம் மையத்தில் மாருதி மற்றும் கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிராந்தி குமார் என்ற 13 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை போண்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது குழந்தையின் தொண்டையில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.