திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி எடுத்ததால் மயக்க நிலைக்குச் சென்ற அவரை அவரது குடும்பத்தினர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததுடன் பழனியாண்டியின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.