திண்டுக்கல் அருகே அண்ணா நகரில் திமுக நிர்வாகி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் பட்டறை சரவணன், இவரை அண்ணா நகர் பகுதியில்  சரவணனை வழிமறித்த மர்ம கும்பல் நேற்று மாலை சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளது.

இச்சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் பரபரப்பான சூழல் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.