
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி எம்பி திமுக நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து தூத்துக்குடியில் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு மக்களவைக் குழு தலைவராக டி.ஆர் பாலுவும், மக்களவை குழு துணை தலைவராக தயாநிதி மாறனும், மக்களவை கொறடாவாக ஆ. ராசாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை குழு துணை தலைவராக சண்முகமும், மாநிலங்களவை கொறடாவாக வில்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் திமுக நாடாளுமன்ற பொருளாளராக ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார்.