சேலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சதீஷ் என்பவரை சண்முகம் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் கொலை செய்ததாக தகவல் வெளியாகி  உள்ளது. நேற்று முன்தினம் சண்முகம் அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்த பொழுது வாகனத்தில் தன்னுடைய வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்பொழுது இரண்டு பைக்குகளில் கும்பலாக வந்த மர்ம நபர்கள் வழிமறித்து  அவரை அறிவாளால்  சராமாறியாக வெட்டியதில் அவருடைய தலை பகுதி சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, கொலை, கொள்ளை சர்வசாதாரணமாக நடக்கிறது என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டிருப்பது, விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த நபர் உயிரிழந்தது ஆகியவற்றை குறிப்பிட்டு பேசியுள்ள அவர், தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தையும், கள்ளச்சாராய விற்பனையையும் தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.