திமுக நிர்வாகிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக, BJP மாநில தலைவர் அண்ணாமலைக்கு 500 கோடி இழப்பீடு கேட்டு திமுக நோட்டீஸ் வழங்கியது. திமுக அமைப்புச் செயலாளர் RSபாரதி சார்பில் வில்சன் MP அனுப்பிய நோட்டீஸில், திமுக மீதான ஆதாரமற்ற அவதூறான, கற்பனையான குற்றச்சாட்டுகளுக்கு 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க தவறினால் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அண்ணாமலை, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் ரூ.84 கோடி நான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார். எனவே பொதுவெளியில் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்ததற்கு ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என அறிவித்துள்ளார்.