தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் வேறு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். நியாயவிலைக் கடைகளில் அதற்கான பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்; அனைத்து வகையான சிறுதானியங்களை கூட்டுறவு அங்காடியில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.