தமிழகத்தில் திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் பரவியதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அறிவித்தபடி மே 6இல் 12ஆம் வகுப்புக்கும், மே 10இல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.