
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியில் கூலி தொழிலாளியை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையடிவார பகுதியைச் சேர்ந்தவர் சுபணன். இவர் தனது மனைவியுடன் வீட்டில் தனியாக இருந்தபோது எதிர் வீட்டுக்காரரான வினிஷ் என்பவர் அரிவாளால் வெட்டியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பிறகு சுபணன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணையில் ஈடுபட்ட நிலையில், அரிவாளால் வெட்டியதாக கூறப்பட்ட வினிஷ் சம்பவத்தின் போது வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது.
மேலும் புகார் அளித்து சிகிச்சை பெற்று வரும் சுபணன் ஒரு கொலை குற்றவாளி என்றும், தனக்குத்தானே காயங்களை ஏற்படுத்திக் கொண்டு பழிவாங்கும் நோக்கத்தில் புகார் அளித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.